• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

எஸ்.பி.வேலுமணி டெண்டர் மோசடி வழக்கு பதிவு- குற்றச்சாட்டுகள் என்ன?

Byadmin

Sep 20, 2024


எஸ்.பி.வேலுமணி

பட மூலாதாரம், S.P. VELUMANI

படக்குறிப்பு, எஸ்.பி.வேலுமணி

சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால், சாலை சீரமைப்பு ஆகிய பணிகளில் முறைகேடு செய்ததாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதன் மூலம் அரசுக்கு சுமார் 26 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களை முடக்குவதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக, அ.தி.மு.க குற்றம் சுமத்துகிறது.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கடந்த 2018 கடைசி முதல் 2019 தொடக்கம் வரை பல்வேறு காலகட்டங்களில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் பல புகார் மனுக்களைக் கொடுத்திருந்தார்.

By admin