• Fri. Jul 11th, 2025

24×7 Live News

Apdin News

ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு 6 நாட்களில் மரண தண்டனை – காப்பாற்ற ஒரே இறுதி வாய்ப்பு என்ன?

Byadmin

Jul 10, 2025


நிமிஷா பிரியா, கேரளா, ஏமன், இந்தியா, மத்திய கிழக்கு
படக்குறிப்பு, நிமிஷா- டோமி தாமஸ் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர்.

‘நிமிஷா பிரியா’, இந்தப் பெயர் மீண்டும் செய்திகளில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த செவிலியரான நிமிஷாவுக்கு, 2017இல் ஏமனில் அந்நாட்டு குடிமகன் தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது ஏமனின் சனா நகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நிமிஷா. தலால் அப்தோ மஹ்தியின் குடும்பம் மன்னிப்பு வழங்கினால், மரண தண்டனையில் இருந்து காப்பாற்றப்படலாம் என்ற நம்பிக்கையில் இருந்த அவருக்கு, ஜூலை 16 மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நிமிஷா பிரியாவின் குடும்பத்தின் சார்பாக, ஏமனில் இந்த வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம் பிபிசி தமிழிடம் இதைக் கூறினார். ஆனால், இதை பிபிசியால் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

ஹூதி கிளர்ச்சிக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் பகுதியுடன் இந்தியாவுக்கு நேரடியாக தூதரக உறவுகள் இல்லை என்பதால், இந்திய தூதரகமும் இந்தச் செய்தியை இதுவரை உறுதி செய்யவில்லை.

By admin