• Tue. Jul 15th, 2025

24×7 Live News

Apdin News

ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு 2 நாட்களில் மரண தண்டனை – கடைசி கட்ட முயற்சியாக கேரளாவில் இருந்து சென்ற அழைப்பு

Byadmin

Jul 15, 2025


ஏமனின் சனா நகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நிமிஷா
படக்குறிப்பு, ஏமனின் சனா நகரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் நிமிஷா

ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்றும் முயற்சியாக கேரளாவில் மிகவும் மதிக்கப்படும் மற்றும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார், ஏமனில் உள்ள சில ஷேக்குகளுடன் பேசியுள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் சேவ் நிமிஷா பிரியா கவுன்சில் உறுப்பினருமான சுபாஷ் சந்திரா, “இன்று சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில் உறுப்பினர்கள் கிராண்ட் முஃப்தியை சந்தித்தனர். அதன் பின்னர் அவர் ஏமனில் உள்ள சில செல்வாக்கு மிக்க ஷேக்குகளுடன் பேசினார்,” என பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

“இறந்தவரின் உறவினர்கள் உட்பட செல்வாக்கு மிக்கவர்கள் சிலர் பங்கேற்கும் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக எங்களிடம் கூறப்பட்டுள்ளது,” என சந்திரா கூறினார்.

போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்பவுள்ளது

By admin