• Sat. Jul 12th, 2025

24×7 Live News

Apdin News

ஏர் இந்தியா விபத்தின் மர்மத்தை விமானிகளின் உரையாடல் ஏன் இன்னும் தீவிரமாக்குகிறது?

Byadmin

Jul 12, 2025


ஏர் இந்தியா விமான விபத்து

பட மூலாதாரம், Getty Images

ஜூன் மாதம் ஏற்பட்ட ஏர் இந்தியா 171 விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான முதல் கட்ட விசாரணையில் புலனாய்வாளர்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர்.

விமானம் புறப்பட்ட சில வினாடிகளில், 12 ஆண்டுகள் பழமையான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் திடீரென “கட்-ஆஃப்” நிலைக்கு மாறியதால், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நின்று, முழுமையாக செயலிழந்தது. “கட்-ஆஃப்” செய்வது பொதுவாக விமானம் தரையிறங்கிய பிறகு மட்டுமே நடக்கும் செயல்.

காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்றவரிடம், “நீ ஏன் கட்-ஆஃப் செய்தாய்?” என்று கேட்க, அதற்கு அவர், “நான் செய்யவில்லை,” என்று பதிலளிக்கிறார்.

இந்த பதிவு யார் கேள்வி கேட்டது, யார் பதிலளித்தது என்பதை தெளிவுபடுத்தவில்லை

By admin