• Mon. Jul 14th, 2025

24×7 Live News

Apdin News

ஏர் இந்தியா விமான விபத்து விசாரணை அறிக்கை பற்றி சர்வதேச ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

Byadmin

Jul 14, 2025


ஏர் இந்தியா, விமான விபத்து, குஜராத், ஆமதாபாத் விமான விபத்து

பட மூலாதாரம், BBC/CHETAN SINGH

படக்குறிப்பு, ஆமதாபாத் விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.

ஆமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து பற்றிய முதல் கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்துகள் விசாரணை ஆணையம் (ஏஏஐபி) வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை உலகம் முழுவதும் விவாதிக்கப்படும் நிலையில் பல ஊடகங்களும் இதைப்பற்றி செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்துக்கு சில வினாடிகளுக்கு முன்பு இரு என்ஜின்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் கட் ஆஃப் நிலைக்கு சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் நின்றது. இந்த சூழ்நிலை மிக மிக அரிதானது என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல ஊடகங்களும் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சு மற்றும் விமானிகளுக்கு இடையேயான உரையாடல் மீதே கவனம் செலுத்தியுள்ளன. இவை முதல்கட்ட விசாரணையின் முக்கிய அங்கமாக உள்ளன.

பிரிட்டன் ஊடக நிறுவனமான டெலகிராப் தனது செய்தியில் விமானிகளின் உரையாடலை மேற்கோள் காட்டிய நிலையில் நியூயார்க் டைம்ஸ், கார்டியன், ஃபினான்சியல் டைம்ஸ் விமான செயல்முறையில் உள்ள பிழைகள், பயிற்சி சிக்கல்கள் மற்றும் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளன.

By admin