• Mon. Jun 8th, 2026

24×7 Live News

Apdin News

ஏர் இந்தியா விமான விபத்து: விமானத்தில் இல்லாதவர்கள் ஓராண்டாகச் சந்திக்கும் வலி என்ன?

Byadmin

Jun 8, 2026


விமானம் மோதியதில் பிரஹ்லோத்  தாக்கூர்

பட மூலாதாரம், Zoya Mateen

படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஆமதாபாத்தில் மருத்துவக் கல்லூரி மீது ஏர் இந்தியா விமானம் மோதியதில் பிரஹ்லோத் தாக்கூரின் மனைவியும், இரண்டு வயது பேத்தியும் உயிரிழந்தனர்.

    • எழுதியவர், ஜோயா மதீன்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்த செய்தியில் உள்ள சில விவரங்கள் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும்.

பிரஹ்லாத் தாக்கூர் காலை கண்விழித்ததும் முதலில் பார்ப்பது அந்தப் புகைப்படங்களைத்தான்.

ஆமதாபாத்தில் உள்ள அவரது சிறிய வீட்டின் பச்சை நிறச் சுவர்களில், பித்தளைப் பாத்திரங்கள் மற்றும் மங்கிப்போன குடும்பப் புகைப்படங்களுக்கு மத்தியில் அந்தப் புகைப்படங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு புகைப்படத்தில் அவரது மனைவி சர்லாபென்னின் முகம் உள்ளது. மற்றொரு புகைப்படத்தில் , வெள்ளை நிற ஆடை அணிந்து புன்னகைக்கும் அவரது பேத்தி ஆத்யாவின் படம் உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்து மோதி விபத்துக்குள்ளான போது, அவர்கள் இருவரும் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் இருந்தனர்.

By admin