• Sun. Jul 13th, 2025

24×7 Live News

Apdin News

ஒட்டுகேட்பு கருவி பொருத்திய விவகாரம்: தனியார் நிறுவன ஆய்வறிக்கை அடிப்படையில் நடவடிக்கை – ராமதாஸ் தகவல் | Action will be taken based on the private company research report – Ramadoss

Byadmin

Jul 13, 2025


விழுப்புரம்: வீட்​டில் ஒட்​டு​கேட்பு கருவி பொருத்​தப்​பட்ட விவ​காரத்​தில், தனி​யார் நிறுவன ஆய்​வுக்​குப் பின்​னர், உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார்.

கடலூர் மாவட்​டம் விருத்​தாசலத்​தில் நேற்று முன்​தினம் செய்​தி​யாளர்​களிடம் பேசிய நிறு​வனர் ராம​தாஸ், “தைலாபுரத்​தில் எனது வீட்​டில் எனது நாற்​காலிக்கு அருகே அதிநவீன ஒட்​டு​கேட்​புக் கருவி பொருத்​தப்​பட்​டுள்​ளது. லண்​டனில் இருந்து வாங்​கப்​பட்ட, விலை மதிப்​புமிக்க இக்​கரு​வியை 2 நாட்​களுக்கு முன்​பு​தான் கண்​டு​பிடித்​தோம். யார் வைத்​தது, எதற்​காக வைத்​தார்​கள் என ஆய்வு நடை​பெறுகிறது” என்​றார்.

இந்​நிலை​யில், திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் உள்ள ராம​தாஸ் இல்​லத்​தில், ஒட்​டு​கேட்பு கரு​வியை ஆய்வு செய்​தவற்​காக தனி​யார் நிறு​வனத்​தைச் சேர்ந்த 5 துப்​பறி​யும் நிபுணர்​கள் நேற்று வந்​தனர். இக்​குழு​வினர் 3 மணி நேரம் ஒட்​டு​கேட்பு கரு​வியை ஆய்வு செய்​தனர்.

பின்​னர் ராம​தாஸ் கூறும்​போது, “என்னை சந்​திக்க பாட்​டாளி சொந்​தங்​கள் வந்து கொண்டே இருக்​கிறார்​கள். இதனால் நான் கூடு​தல் மகிழ்ச்​சி​யுடன் இருக்​கிறேன். எனது வீட்​டில் வைக்​கப்​பட்ட ஒட்​டு​கேட்​புக் கரு​வியை தனி​யார் நிறுவன துப்​பறி​யும் குழு​வினர் ஆய்வு செய்து வரு​கின்​றனர். அவர்​கள் அளிக்​கும் ஆய்வு அறிக்​கை​யின் அடிப்​படை​யில் அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும். தைலாபுரத்​துக்கு வந்து தாயை மகன் (அன்​புமணி) சந்​தித்​துள்​ளார். பாமக பொதுக்​குழு கூட்​டத்தை கூட்​டு​வதற்​கான காலம் இன்​னும்​ வரவில்​லை” என்​றார்​.

சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள்: பாமக செய்​தித் தொடர்​பாளர் வழக்​கறிஞர் கே.​பாலு நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “மூத்த அரசி​யல் தலை​வ​ரான ராம​தாஸ் வீட்​டில் ஒட்​டுக்​கேட்பு கருவி பொருத்​தப்​பட்​டது உண்​மையெனில், அது கண்​டிக்​கத்​தக்​கது. இதன் பின்​னணி​யில் இருப்​பவர்​கள் யார், நோக்​கம் என்ன என்ற விவரங்​களை மக்​களுக்கு தெரிவிக்க வேண்​டியது அரசின் கடமை.

எனவே, சைபர் பாது​காப்பு வல்​லுநர்​களை உள்​ளடக்​கிய உயர்​நிலைக் குழுவை அமைத்து விசா​ரித்​து, பின்​னணி​யில் உள்​ளவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்​.



By admin