• Mon. Apr 27th, 2026

24×7 Live News

Apdin News

ஒரே தாய் மற்றும் இருவேறு தந்தைக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் – 2 ஆண்டுகள் கழித்து உண்மை கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

Byadmin

Apr 27, 2026


கர்ப்பிணி பெண்

பட மூலாதாரம், David Zorrakino/Europa Press via Getty Images

தன்னுடைய இரண்டு வயதான இரட்டை ஆண் குழந்தைகளின் தந்தை யார் என்பதை உறுதி செய்வதற்காக, 2018-ஆம் ஆண்டு பெண் ஒருவர் கொலம்பியா தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ள மக்கள்தொகை மரபியல் மற்றும் அடையாள ஆய்வகத்துக்கு சென்றார்.

அந்த ஆய்வகம் அப்பெண்ணுக்கு அதற்கான வழக்கமான பரிசோதனையை செய்தது, பின்னர் மீண்டும் அச்சோதனையை மேற்கொண்டது.

அதன் முடிவு மிகவும் ஆச்சர்யமாக இருந்ததால், அதை முற்றிலும் உறுதிப்படுத்திக்கொள்ள அவர்கள் விரும்பினர். அந்த இரட்டை குழந்தைகளுக்கு ஒரே தாய், ஆனால் இருவேறு தந்தைகள்.

இது மிகவும் அரிதான ஹெட்டிரோபெட்டர்னல் சூப்பர்ஃபெக்குண்டேஷன் (heteropaternal superfecundation – இரட்டைக் குழந்தைகள் ஒரே தாய்க்குப் பிறந்தாலும், வெவ்வேறு தந்தையருக்குப் பிறப்பது) எனப்படுகிறது. உலகம் முழுவதிலும் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளில் இத்தகைய அரிதான கருவுறுதல் நிகழ்வுகள் சுமார் 20 மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

அப்பல்கலைக்கழகத்தில் உள்ள நிபுணர்கள் இது கோட்பாட்டளவில் சாத்தியமானது என அறிந்திருந்தாலும், இதுபோன்ற ஒன்றை அவர்கள் நேரடியாக அறிந்ததில்லை. இது உடனடியாக அவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டியது.

By admin