கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியுள்ளதுடன், நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின.
போர்ட் மெக்நீல் கடலோர பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக அச்சமடைந்த மக்கள், வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
எனினும், நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
The post கனடாவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு appeared first on Vanakkam London.