• Sat. Aug 8th, 2026

24×7 Live News

Apdin News

கருணாநிதி: பராசக்தி நீதிமன்ற காட்சி உட்பட நினைவில் நிற்கும் 8 வசனங்கள்

Byadmin

Aug 8, 2026


மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

    • எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்லாது, இந்திய அரசியலிலும் முக்கிய அங்கம் வகித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. சினிமாவில் அவருடைய எழுத்துப் பணி அரசியலுடன் இணைந்தே வளர்ந்தது.

1947-ஆம் ஆண்டில் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ராஜகுமாரி படத்தில் வசனகர்த்தாவாக தொடங்கிய அவரின் கலைப்பயணம் அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மணமகள் என வளர்ந்தது. 1952-ஆம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தில் அவருடைய வசனங்கள் பெரும் புகழை பெற்றன.

தமிழ் திரையுலகில் பராசக்தி திரைக்கதை வசனங்கள் பட்டிதொட்டியெல்லாம் சென்றடைந்தன. அதிலிருந்து கருணாநிதியின் வளர்ச்சி இன்னும் வேகமானது. ‘மனோகரா’வின் வசனங்கள் இன்றும் கூட பலரால் விரும்பி கேட்கப்படுகின்றன.

அதைத்தொடர்ந்து, பூம்புகார், எங்கள் தங்கம், ரங்கோன் ராதா, அரசிளங்குமரி, பூக்காரி, தூக்குமேடை, பாலைவனச் சோலை, நீதிக்கு தண்டனை, பாசப் பறவைகள், பாசக் கிளிகள், இளைஞன், பொன்னர் சங்கர் உட்பட 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு கருணாநிதி வசனங்கள் எழுதினார். இன்று கருணாநிதியின் 8ஆவது நினைவுநாள்.

கருணாநிதியுடன் கவிஞர் இளையபாரதி
படக்குறிப்பு, கருணாநிதியுடன் கவிஞர் இளையபாரதி

கருணாநிதியின் வசனங்கள், எழுத்து ஆர்வம், சினிமா பயணம் குறித்து அவருடன் பழகியவர்களிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ‘போராடடா, ஒரு வாளேந்தடா’ பாடலை எழுதியவரும், பல ஆண்டுகள் கருணாநிதியுடன் நெருங்கி பழகியவருான இளையபாரதி கூறுகையில், ”நான் அவரை கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் நெருக்கமாக உடனிருந்து கவனித்திருக்கிறேன். ஒரே ரத்தம், காவலுக்கு கெட்டிக்காரன், பாசக்கிளிகள் உட்பட 12 படங்களில் நான் கூடவே இருந்திருக்கிறேன். சினிமா தொடர்பான பல பணிகளில் உடனிருந்துள்ளேன். அவர் வசனம் எழுதிய படங்களில் இணை இயக்குநராக இருந்திருக்கிறேன்” என்றார்.

By admin