கிளம்பிய வதந்திகள்
2016-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ஞானேந்திர குமார், தற்போது கர்நாடக தொழில் மற்றும் வர்த்தகத் துரையின் MSME இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த வியாழக்கிழமை முதல் இவரது அதிகாரபூர்வ அரசு தொலைபேசி எண் செயலில் இல்லை அதனால் இவரை தொடர்புகொள்ள முடியவில்லை.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வரை அவர் சென்றதும், அங்கிருந்து டெல்லிக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அவர் கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வுக்கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றியவர் என்பதால், அங்கு நடந்த ED சோதனைகளுக்குப் பயந்து அவர் தலைமறைவாகிவிட்டார் என செய்திகள் பரவின.