• Mon. Jul 27th, 2026

24×7 Live News

Apdin News

காமன்வெல்த் போட்டிகள்: குத்துச்சண்டையில் பாக். வீரரை பொளந்துகட்டிய இந்திய வீரர் ஜதுமணி சிங்

Byadmin

Jul 27, 2026


இந்தியாவின் மாண்டெங்பாம் ஜதுமணி சிங், 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 16-ஆவது சுற்றுப் போட்டியில், பாகிஸ்தானின் சுமாமா ரஹ்மானை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் ஒருமனதான தீர்ப்பின் மூலம் ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தி, ஆடவர் 55 கிலோ குத்துச்சண்டை காலிறுதிக்கு முன்னேறினார்.

ஜதுமணி மூன்று சுற்றுகளிலும் தனது எதிராளியை விட மிக சிறப்பாக செயல்பட்டு, ஐந்து நடுவர்களின் தீர்ப்பையும் பெற்று, புள்ளிகள் அடிப்படையில் ஒரு முழுமையான வெற்றியை பதிவு செய்தார்.

இந்திய குத்துச்சண்டை வீரர், தனது கூர்மையான தாக்குதல், திறமையான அசைவுகள் மற்றும் கட்டுக்கோப்பான தற்காப்பு ஆகியவற்றின் மூலம் போட்டி முழுவதும் தனது கட்டுப்பாட்டை தக்கவைத்து, பாகிஸ்தான் வீரர் மீண்டு வருவதற்கு சிறிதளவும் இடமளிக்கவில்லை.

By admin