கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
அத்துடன் மத்திய, வடமேல், வடமத்திய, ஊவா, சப்ரகமுவ, தென், வடக்கு மற்றும் மேல் ஆகிய மாகாணங்களின் ஆளுநர்களும் தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளனர்.
இந்நிலையில், 9 மாகாணங்களுக்கும் விரைவில் புதிய ஆளுநர்களைப் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கவுள்ளார்.
வடக்கு மாகாணத்துக்கு யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்று தெரியவருகின்றது.