• Tue. Jul 29th, 2025

24×7 Live News

Apdin News

கீழடி அகழாய்வு அரசியல் : வடக்கு, தெற்கு பிளவை பிரதிபலிக்கிறதா?

Byadmin

Jul 29, 2025


கீழடி, தமிழ்நாடு தொல்லியல் துறை, வரலாறு

பட மூலாதாரம், ASI

படக்குறிப்பு, கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடம் இது. அங்கு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அங்கு தொழில் ரீதியிலான நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளனர்.

    • எழுதியவர், செரிலான் மொல்லன்
    • பதவி, பிபிசி

தென்தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற கிராமத்தில் கிடைத்த தொல்லியல் பொருட்கள், வரலாற்று மற்றும் அரசியல் ரீதியான விவாதங்களை கிளப்பியுள்ளன.

தென்னந்தோப்புகளுக்கு மத்தியில், 15 அடி (4.5 மீ) ஆழத்தில் அகழிகளில் புதைக்கப்பட்ட சுடுமண் பானைகளின் துண்டுகள், செங்கல் கட்டமைப்புகள் இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்கள் 2,000 முதல் 2,500 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்தவை, சுமார் கி.மு 580-ஐ சேர்ந்தவை என தமிழ்நாட்டைச் சேர்ந்த தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த கண்டுபிடிப்புகள் இந்திய துணைக் கண்டத்தின் தற்போதைய நாகரிகம் பற்றிய கதைகளை மாற்றி அமைக்கும் வகையில் இருப்பதாகவும் கூறுகின்றனர்.

By admin