• Wed. Jul 9th, 2025

24×7 Live News

Apdin News

குஜராத்: பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் – என்ன நடக்கிறது? நேரலை

Byadmin

Jul 9, 2025


குஜராத் கம்பீரா பாலம்

பட மூலாதாரம், ugc

(இந்த சமீபத்திய செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் கம்பீரா பாலம் திடீரென உடைந்து விழுந்ததில், அதில் சென்று கொண்டிருந்த சில வாகனங்கள் ஆற்றுக்குள் உடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிடிஐ செய்தி முகமையின்படி, இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மத்திய குஜராத் பகுதியில் உள்ள பிபிசி குஜராத்தியின் சகாக்கள், மஹிசாகர் ஆற்றில் அமைந்துள்ள, வாகனங்கள் வந்துசெல்லும் இந்த பாலம் பெரியளவில் உடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த பாலம் வதோதரா மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளது. பாலம் திடீரன உடைந்ததால், அதில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சில ஆற்றுக்குள் விழுந்துள்ளன.

இந்த சம்பவத்தையறிந்து, உள்ளூர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

By admin