தொடர்ந்து பேசிய அவர்,”எனக்கு குழந்தை பிறந்தால், அதுவே என் உலகமாக மாறிவிடும். குழந்தை பிறந்த ஆரம்ப வருடங்களில் நான் சினிமாவில் நடிக்காமல், முழு நேரத்தையும் என் குழந்தையுடனேயே செலவிடுவேன். என்னுடைய குழந்தைப் பருவம் அவ்வளவு மகிழ்ச்சியானதாக இல்லை. அதனால், எனக்கு கிடைக்காத பல நல்ல விஷயங்களை என் குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றும் உருக்கமாகப் பேசியிருந்தார்.