• Mon. Jun 22nd, 2026

24×7 Live News

Apdin News

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்தது!

Byadmin

Jun 22, 2026


செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (21) ஞாயிற்றுக்கிழமை 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 11 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 30ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்  நடைபெற்றது.

அதனடிப்படையில், இது வரையிலான அகழ்வு பணிகளின் போது 405 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 377 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

By admin