• Sun. Aug 2nd, 2026

24×7 Live News

Apdin News

குவைத்துடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்த பாகிஸ்தான் – இந்தியாவுக்கு என்ன கவலை?

Byadmin

Aug 2, 2026


இது இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?

பட மூலாதாரம், ISPR

    • எழுதியவர், உமைர் சலீமி
    • பதவி, பிபிசி உருது
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்துக்கு குவைத் சட்டப்பூர்வ ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் என்ன உள்ளது? ஏற்கனவே செளதி அரேபியாவுடனும் பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருக்கும் நிலையில் பாகிஸ்தானின் செல்வாக்கு உயர்ந்து வருகிறதா?

குவைத்தில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது. ராணுவப் பயிற்சி, உளவுத்துறை ஒத்துழைப்பு, தளவாட ஆதரவு, பாதுகாப்புத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் அனுபவப் பரிமாற்றம் போன்ற துறைகளில் இந்த ஒப்பந்தம் கவனம் செலுத்துகிறது

குவைத்திற்கான பாகிஸ்தான் தூதர் ஜாஃபர் இக்பால், குவைத் ஊடகமான அல்-ஜரிதாவிடம், இந்த ஒப்பந்தம் ஜூன் 11, 2023 அன்று கையெழுத்திடப்பட்டதாகவும், தற்போது அதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் 12 சரத்துகளைக் கொண்டுள்ளது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே ஒரு கூட்டு ராணுவக் குழுவை அமைப்பதற்கான ஏற்பாடும் இதில் இடம்பெற்றுள்ளது. அந்தக் குழு ஆண்டுக்கு ஒருமுறை கூடும்.

அதேபோல், இரு தரப்பினரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் எந்த நேரத்திலும் ஒப்பந்தத்தைத் திருத்த முடியும்.

By admin