• Sun. Jul 27th, 2025

24×7 Live News

Apdin News

கோவை ஜெகதீசனுக்கு வந்த பிரிட்டன் அழைப்பு – இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி?

Byadmin

Jul 27, 2025


தமிழக வீரர் ஜெகதீசன் அனுபவமுள்ள இஷான் கிஷனை தாண்டி இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி?

பட மூலாதாரம், Instagram/jagadeesan_200

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்துவரும் மான்செஸ்டர் டெஸ்டில், வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, ரிஷப் பந்த் கடைசி டெஸ்டில் (ஓவல்) இருந்து விலகினார்.

கடந்த லார்ட்ஸ் டெஸ்டில் பந்த்-க்கு கையில் காயமேற்பட்ட போது, விக்கெட் கீப்பிங்கை கவனித்துக்கொண்ட துருவ் ஜுரேல், மான்செஸ்டரிலும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், பந்த்திற்கு மாற்று வீரராக தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜெகதீசன் முதல்முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 29 வயதான ஜெகதீசன், லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கும் கடைசி டெஸ்டுக்கு முன்பாக இந்திய அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜுரேல் இருக்கும் நிலையில், ஜூலை 31 இல் ஓவல் மைதானத்தில் ஜெகதீசன் தனது அறிமுக டெஸ்டில் விளையாட வாய்ப்பில்லை. ஒருவேளை ஜுரேலுக்கு உடற்தகுதியில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் கூட, சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் அனுபவமுள்ள கேஎல் ராகுல் அணியில் இருக்கிறார்.

By admin