• Thu. Apr 23rd, 2026

24×7 Live News

Apdin News

கோவை: வாக்களிக்க சொந்த ஊர் செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு

Byadmin

Apr 23, 2026


தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026

பட மூலாதாரம், ANI

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் 75,000-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நடிகர் அஜித் திருவான்மியூரில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக தன் வாக்கை பதிவு செய்தார்.

இதனிடையே, தமிழ்நாட்டு மக்கள் சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்ய வேண்டும் என, பிரதமர் மோதி வலியுறுத்தியுள்ளார்.

அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வேளையில், அனைத்து வாக்காளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இந்த புனிதமான ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழ்நாட்டின் இளைஞர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான வாக்குகள் பதிவாக வழிவகை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை:

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 57,343,291 ஆகும்

ஆண்கள்: 2,80,30,658

பெண்கள்: 2,93,04,905

மூன்றாம் பாலினத்தவர்: 7,728

By admin