• Wed. Aug 26th, 2026

24×7 Live News

Apdin News

சர்க்கரை விலை தொடர்ந்து உயர்வு; மோதி அரசு நடவடிக்கை எடுத்தும் குறையாதது ஏன்?

Byadmin

Aug 26, 2026


பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உயர்ந்துவரும் சர்க்கரை விலை ஒரு தேர்தல் பிரச்சினையாக உருவெடுக்கக்கூடும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உயர்ந்துவரும் சர்க்கரை விலை ஒரு தேர்தல் பிரச்னையாக உருவெடுக்கக்கூடும்

    • எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

உலகளவில் சர்க்கரையை மிக அதிக அளவில் பயன்படுத்தும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை இல்லாத அளவு சர்க்கரையின் விலை 40 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

திங்கள்கிழமை ஒரே நாள் வர்த்தகத்தில் சர்க்கரை நிறுவனங்களின் பங்குகள் 12% வரை உயர்ந்தன. சர்க்கரை துறையின் எதிர்கால நிலை மேம்படும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த உயர்வு ஏற்பட்டது

பஜாஜ் ஹிந்துஸ்தான் சுகர், அவத் சுகர் அண்ட் எனர்ஜி, டால்மியா பாரத் சுகர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ், தாம்பூர் சுகர் மில்ஸ், துவாரிகேஷ் சுகர் இண்டஸ்ட்ரீஸ், மகத் சுகர் அண்ட் எனர்ஜி, மவானா சுகர்ஸ், பொன்னி சுகர்ஸ் (ஈரோடு), உகர் சுகர் வர்க்ஸ் மற்றும் உத்தம் சுகர் மில்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஒரே நாள் வர்த்தகத்தில் தங்களது 52 வார உச்சத்தை எட்டின.

சுமார் ஒரு தசாப்தத்தில் முதல்முறையாக, 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சர்க்கரையை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது. அதாவது, விலையைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் வெளிநாடுகளில் இருந்து வரியின்றி சர்க்கரையை இந்தியா வரவழைக்கிறது.

ஊடகச் செய்திகளின்படி, சில மாநிலங்களில் சர்க்கரையின் விலை உயர்வு 50 சதவிகிதத்தை எட்டியுள்ளது. உத்தராகண்ட், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் சர்க்கரையின் விலை கிலோ 65 ரூபாயைக் கடந்துள்ளது.

By admin