• Wed. Jul 22nd, 2026

24×7 Live News

Apdin News

சர்வதேச கச்சா எண்ணெய் விலை 91 டாலராக உயர்வு.. எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்கியதன் எதிரொலி

Byadmin

Jul 22, 2026


பாகிஸ்தான் உடனான மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ஈரான் ஈடுபட்டு வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியது.

இதன்மூலம் ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தொடர்ந்து 11-வது நாளாக வான்வழி தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது.

ஈரானில் நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதலுக்கு முன்னதாக, இப்போரில் முக்கிய மத்தியஸ்தராக விளங்கும் ஈரானிய உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமெனி, போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை புதுப்பிக்கும் நோக்கில் பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீரை சந்தித்தார். இதைத்தொடர்ந்து மொமேனி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபையும் சந்தித்தார்.

இதையடுத்து பாகிஸ்தானில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனக் கூறி, ஈரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று தாக்குதல்கள் நடத்தியது.

இந்த சம்பவத்தில் ஈரான் ஜலசந்தியில் ஒரு எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள எச்சரிக்கை ஒலிப்பான்கள் எச்சரிக்கப்பட்டன.

இதன் விளைவாக எரிசக்தி விலைகள் அதிகரித்து, சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 91 டாலருக்கும், அமெரிக்காவில் பெட்ரோலின் விலை ஒரு கேலனுக்கு சராசரியாக 4 டாலராகவும் உயர்ந்தது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய டிரம்ப், யுரேனியத்தைச் செறிவூட்டும் ஈரானின் முக்கியத் தளங்களில் ஒன்றிற்கு அருகிலுள்ள ஒரு பகுதியை அமெரிக்கப் படைகள் விரைவில் குறி வைக்கக்கூடும் என்று சூசகமாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் வரவிருக்கும் சூழலில், ஈரான் உடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வராததை தொடர்ந்து, எரிசக்தி மீதான இந்த விலை உயர்வு அமெரிக்க மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

By admin