• Sun. Sep 22nd, 2024

24×7 Live News

Apdin News

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களுக்குள் வெளியாகும் | கல்வி அமைச்சர்

Byadmin

Sep 15, 2024


2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படவுள்ளது.

இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  இன்று சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெறவுள்ளது.

நீண்ட காலதாமதத்தை எதிர்கொண்ட கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும், 2025 ஆம் ஆண்டில் பரீட்சைகள் காலதாமதம் இன்றி உரிய நேரத்தில் நடைபெறும் என உறுதியளித்துள்ளார்.

By admin