• Fri. Jul 18th, 2025

24×7 Live News

Apdin News

சிரியாவில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சி!

Byadmin

Jul 17, 2025


சிரியாவில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

இதற்காக ஓர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக சிரியாவில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தலைநகர் டமாஸ்கஸில் இஸ்ரேலிய இராணுவமும் திடீர் தாக்குதல் நடத்தியது.

தொடர்புடைய செய்தி : சிரியா மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்

இந்நிலையில், சிரியாவில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சண்டைநிறுத்தத்திற்குக் கடப்பாடு தெரிவித்துள்ள அனைத்துத் தரப்புகளும் அவற்றின் பங்கை ஆற்றவேண்டும் என்றும் அவர் அதில் வலியுறுத்தினார்.

அதேவேளை, அமெரிக்காவின் அழைப்புக்கு இணங்கி, தென்பகுதியிலிருந்து இராணுவ வீரர்களை வெளியேற்றத் தொடங்கியிருப்பதாக சிரியாவின் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

By admin