• Thu. Jul 3rd, 2025

24×7 Live News

Apdin News

சிவகங்கை காவல் மரணம் – திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்துமா?

Byadmin

Jul 3, 2025


சிவகங்கை, திருப்புவனம், காவல் மரணம், அஜித் குமார், சிபிஐ

பட மூலாதாரம், Screengrab

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோயில் காவலாளி அஜித் குமார் போலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் 5 காவலர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனைக் கண்டித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “போலீஸின் போலி எஃப்.ஐ.ஆர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மேற்பார்வை செய்து விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.



By admin