• Fri. Jul 11th, 2025

24×7 Live News

Apdin News

சீனாவுடன் நல்லுறவை மேம்படுத்த முயலும் இந்தியா – அமெரிக்கா குறித்த கவலை காரணமா?

Byadmin

Jul 10, 2025


 உறவுகளை மீட்டெடுப்பதற்காக சீனாவை அணுக வேண்டிய கட்டாயத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வேகமாக மாறி வரும் புவிசார் அரசியல், உறவுகளை மீட்டெடுப்பதற்காக சீனாவை அணுக வேண்டிய கட்டாயத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்

பல ஆண்டுகளாக எல்லையில் நிலவிய பதற்றங்களுக்குப் பிறகு, இந்தியாவும் சீனாவும் மெதுவாக உறவுகளை மீட்டெடுக்க முயல்வது போலத் தெரிகிறது. ஆனால், இதில் இன்னும் பெரிய சவால்களும் சந்தேகங்களும் உள்ளன.

கடந்த மாத இறுதியில், இரண்டு மூத்த இந்திய அதிகாரிகள் சீனா சென்றது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அறிகுறியாகக் கருதப்பட்டது.

ஜூன் மாதத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டங்களுக்காக தனித்தனியாக சீனா சென்றனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது சீனா, ரஷ்யா, இரான், பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகளைக் கொண்ட யூரேசிய பாதுகாப்பு அமைப்பு. ராஜ்நாத் சிங்கின் பயணம்தான், ஐந்து ஆண்டுகளில் ஒரு மூத்த இந்திய அதிகாரியின் முதல் சீனப் பயணம்.

By admin