• Sat. Sep 21st, 2024

24×7 Live News

Apdin News

சென்னை டெஸ்ட்: பும்ரா புயலில் சுருண்ட வங்கதேசம்- சேப்பாக்கத்தில் நடந்த திடீர் மாற்றம் என்ன?

Byadmin

Sep 21, 2024


பும்ரா

பட மூலாதாரம், Getty Images

பும்ராவின் ‘மாஸ்டர் கிளாஸ்’ பந்துவீச்சு, அறிமுக வீரர் ஆகாஷ் தீப், சிராஜ் ஆகியோரின் வேகப்பந்துவீச்சில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களில் சுருண்டது.

ஃபாலோ ஆன் வழங்காமல் 2வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 308 ரன்கள் முன்னிலையுடன் பேட் செய்து வருகிறது. 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்துள்ளது. சுப்மான் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

கோலி, ரோஹித் சொதப்பல்

2வது இன்னிங்ஸில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 17 ரன்னில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் 5 ரன்னில் தஸ்கின் அகமது பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஜெய்ஸ்வால் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சேப்பாக்கமா இது!

சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர்கள் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா 4 விக்கெட், ஆகாஷ், சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

By admin