• Sat. Jul 18th, 2026

24×7 Live News

Apdin News

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அவிரா’!

Byadmin

Jul 17, 2026


டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அறிமுகமான பிறகு திரைத்துறையில் பல பரீட்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, ரசிகர்களை வசீகரித்து வருகிறது. இந்தத் தருணத்தில் டிஜிட்டல் தொழில்துறையில் புதிதாக அறிமுகமாகி ஆக்கிரமிப்பு செய்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் ‘அவிரா’ என்ற பெயரில் முழு நீள திரைப்படம் உருவாகி வருகிறது.

விளம்பர பட இயக்குநரான பிரபாகரன் முதன் முதலாக போட்டோ ரியலிஸ்டிக் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ‘அவிரா’ என்ற முழு நீள திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தை லைட் ஹவுஸ் ஃபிலிம் கம்பனி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கணேஷ் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக இயக்குநர் பேசுகையில், ”அவிரா என்றால் பிரபஞ்சத்தின் பேரொளி என பொருள். புராண காலத்து கதையை பின்னினியாக கொண்டு கற்பனை கலந்த படைப்பாக ‘அவிரா’ தயாராகி இருக்கிறது’: என்றார்.

இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் திரைப்படங்கள்-  கிறாபிக்ஸ் திரைப்படங்கள்-  ஆகியவற்றை கடந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய திரைப்படங்கள் எதிர்காலத்தில் வெளியாகி… ரசிகர்களை வசப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

The post செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அவிரா’! appeared first on Vanakkam London.

By admin