• Wed. Jul 23rd, 2025

24×7 Live News

Apdin News

“செய்யாத குற்றத்திற்காக இளமைக் காலத்தை இழந்தேன்” – மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவர் கூறுவது என்ன?

Byadmin

Jul 22, 2025


மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மும்பை ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 189 பேர் பலி (கோப்பு படம்)

2006 ஆம் ஆண்டு மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து 19 ஆண்டுகளும், விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 10 ஆண்டுகளும் கழிந்துவிட்டன. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் 12 பேர் தண்டிக்கப்பட்டு ஒருவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் வழக்கின் மேல்முறையீட்டில் நேற்று தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்றம், தண்டிக்கப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்துள்ளது. ஆனால் பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமல் உள்ளது.

ஜூலை 11 2006 அன்று மும்பை புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த விபத்துகள் ஏழு வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்தன.

இதில் 189 பேர் உயிரிழந்த நிலையில் 824 பேர் காயமடைந்தனர். மும்பையில் நிகழ்ந்த மிகத் தீவிரமான தாக்குதலாக கருதப்படும் இது ‘7/11 குண்டுவெடிப்பு’ என பரவலாக அழைக்கப்படுகிறது.

By admin