2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 241 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 37,934 ஆகும்.
அதன்படி, இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அத்துடன், ஜனவரி மாதத்தில் 252,761 சுற்றுலாப் பயணிகளும் , பெப்ரவரி மாதத்தில் 240,217 சுற்றுலாப் பயணிகளும் , மார்ச் மாதத்தில் 229,298 சுற்றுலாப் பயணிகளும் , ஏப்ரல் மாதத்தில் 174,608 சுற்றுலாப் பயணிகளும் , மே மாதத்தில் 132,919 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
The post ஜூன் மாதத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை appeared first on Vanakkam London.