• Sun. Jul 13th, 2025

24×7 Live News

Apdin News

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு – பின்னுக்குத் தள்ளப்படும் நவீன அறிவு | TNPSC Group 4 Exam – Modern knowledge being pushed back

Byadmin

Jul 13, 2025


தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் குரூப் 4 தேர்வு நேர்த்​தி​யாக நடந்து முடிந்​துள்​ளது. சுமார் 11.18 லட்​சம் பேர் தேர்வை எழுதி உள்​ளனர். எத்​தனை தேர்வு மையங்​கள், எத்​தனை ஆயிரம் பணி​யாளர்​கள், எத்​தனை லட்​சம் தேர்​வர்​கள்.. அனை​வரை​யும் ஒருங்​கிணைத்து மிகுந்த கவனத்​துடன் தேர்​வாணை​யம் செயல்​பட்டு இருக்​கிறது. ஆணை​யத்​துக்கு மனமார்ந்த வாழ்த்​துகள்.

டிஎன்​பிஎஸ்சி தேர்வு குறித்து பல குற்​றச்​சாட்​டு​கள், விமர்​சனங்​களை பலர் எழுப்​பலாம். அதன் உண்​மைத் தன்​மைக்​குள் செல்ல விரும்​ப​வில்​லை. ஆனால், தேர்​வுக்​கான ஏற்​பாடு​களைப் பொருத்​தமட்​டில் பெரி​தாகக் குறையேதும் இல்லை என்​பதே உண்​மை. தேர்வு எழு​திய பல இளைஞர்​களைத் தொடர்பு கொண்டு விசா​ரித்​த​தில், எல்​லாத் தேர்வு மையங்​களி​லும் ஏற்​பாடு​கள் சிறப்​பாக இருந்​த​தாகவே கூறி​னார்​கள். இந்த வெற்​றிக்​குப் பின்​னால் இருக்​கும் திட்​ட​மிடல், உழைப்​பு,அர்ப்​பணிப்பு பாராட்​டுக்கு உரியது.

இனி… வினாத்​தாள்!

தமிழ், பொது அறிவு என இரண்டு பிரிவு​கள்; ஒவ்​வொன்​றி​லும் 100 வினாக்​கள்; ஒவ்​வொன்​றுக்​கும் ஒன்​றரை மதிப்​பெண்​கள்; இரு பிரிவு​களும் சேர்த்து 300 மதிப்​பெண்​கள். ஆமாம். அது என்ன ஒன்​றரை மதிப்​பெண்? ஒவ்​வொரு விடைக்​கும் ஒரு மதிப்​பெண் என்று இருக்​கலாமே. அது என்ன ஒன்​றரை? இது என்ன ‘லாஜிக்’? ஆணை​யம் சற்றே விளக்​கி​னால் நலமாய் இருக்​கும்.

இரண்டு பகு​தி​களி​லுமே பழகிய பாதை​யில், பழகிய வினாக்​கள். அதி​லும், தமிழ் மொழிப் பிரிவு, இளம் தேர்​வர்​களைப் பல பத்​தாண்​டு​களுக்​குப் பின்​னுக்கு இழுக்​கிறது. நாளுக்கு நாள் வெகு வேக​மாக மாறிவரும் அறி​வியல் தொழில்​நுட்ப தேவை​களுக்கு ஏற்ப தன்​னைத் தகவ​மைத்​துக் கொள்​ளும் திறன், மிக நிச்​சய​மாக, நம் தமிழுக்கு இருக்​கிறது. இதையெல்​லாம் கவனத்​தில் கொள்​ளாமல், ‘இலக்​கணம்’ என்​கிற குடு​வைக்​குள் இளம் தலை​முறை​யின் தாய்​மொழி அறிவை அடைக்க முயற்​சிப்​பது ஏன்?

அரசு நிர்​வாகத்​தில் பங்​கேற்று மக்​களுக்கு சேவை செய்ய வேண்​டிய இளம் பணி​யாளர்​களுக்​கு, வினாத்​தாள் எதிர்​பார்க்​கும் அறி​வு, எந்த வகை​யில் பயன் உள்​ள​தாக இருக்​கும்? தமிழ்ப் பிரிவு வினாக்​களில் காணப்​படும் கடும் வறட்​சி, நம்மை அதிர்ச்​சிக்கு உள்​ளாக்​கு​கிறது. முனைமம், நீட​னு​போகம், ஓலக்​கம், கக்​கல் கரிசல், அணி​கம், அநிகம், அனிகம், செற்​றம், முரல், வரு​வி, வாளை, வியாளம்.. இவற்​றையெல்​லாம் மீட்​டெடுக்​கும் முயற்​சி​யில் தவறில்​லை. ஆனால் அதற்​கான களம் இது​வல்ல. இதனை ஏனோ ஆணை​யம் உணர்ந்து கொள்ள மறுக்​கிறது.

இதற்கு அப்​பால், இப்​பிரி​வில் அறி​வார்ந்த வினாக்​களும் ஏராள​மாக இடம் பெற்​றுள்​ளன. ‘தகு​தி​யான் வென்று விடல்’ எனும் குறளில், ‘தகு​தி​யான்’ என்​ப​தன் பொருள் என்ன? ‘வேளைப்​பிசகு’ என்​றால் என்ன? ‘அழக்​கொண்ட எல்​லாம் அழப் போம்’ என்​ப​தற்கு இணை​யான பழமொழி யாது?

‘மண்​ணோடு இயைந்த மரத்​தனையர்’ என்று குறள், யாரைச் சுட்​டு​கிறது? தோழர் என்​னும் பொருள் தரும் ‘காம்​ரேட்’ எனும் சொல் எந்த மொழியைச் சேர்ந்​தது? உள்​ளிட்ட வினாக்​கள், உண்​மை​யில் தரமானவை​தாம்.

பொது​வாக, மொழிப் பிரி​வில் சுவாரசி​ய​மான கேள்வி எது​வும் எதிர்​பார்க்க இயலாது​தான். ஆனால் ஓர் இன்ப அதிர்ச்​சி​யாக அப்​படியொரு வினா கட்​டுரை நிறை​வில் பார்ப்​போம். அரைப் புள்​ளி, கால் புள்ளி இடு​தல், அகர வரிசைப்​படி சொற்​களை சீர் செய்​தல், உவமை​களை விளக்​குதல், ஆங்​கில கலைச் சொற்​களுக்கு இணை​யான தமிழ்ச் சொல் கண்​டறிதல் ஏற்​புடைய​தாகவே இருந்​தன. ஆனாலும், காலத்​துக்கு ஒவ்​வாத, நிகழ் வாழ்​வுக்​குத் தேவைப்​ப​டாத பொருத்​தமற்ற அம்​சங்​கள், விரவிக் கிடக்​கின்​றன. இளம் தலை​முறைக்கு இவ்​வகைக் கேள்வி​கள் பெரும் சவாலாக இருந்​திருக்​கக் கூடும். கட்​டா​யம் தவிர்த்து இருக்​கலாம்.

அடுத்​து, பொது அறி​வு. வினாத்​தாள் இதனை, ‘மனக்​கணக்கு நுண்​ணறி​வு’ என்​கிறது! பஞ்​சமி நிலங்​கள், தமிழகத்​தின் முந்​தைய நிதி அமைச்​சர்​கள், ‘கால வரிசைப்​படி’ விருதுகள், தேர்​தல் வாக்​குப்​ப​திவு இயந்​திரம், அகழ்​வா​ராய்ச்சி நடை​பெற்ற ஊர்​கள், உச்ச நீதி​மன்ற நீதிபதி நியமனம், பஞ்​சா​யத்து ராஜ் குழுக்​கள், நெல் சாகுபடி, மதுரை மில் வேலை நிறுத்​தம், பணவீக்​கக் காரணம், புற்​று​நோய் சிகிச்சை தொடர்​பான வினாக்​கள், பாராட்​டும்​படி இருந்​தன.

நில அளவைப் புத்​தகத்​தில் உள்​ளபடி ஒரு பதி​வைத் தந்​து, நிலத்​தின் பரப்​பளவு என்ன? என்​கிற கேள்வி – அசத்​தல்! தமிழ்​நாடு ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்​புத் துறை​யின் இலவச அழைப்பு எண்.. பயனுள்ள கேள்​வி. தமிழ்த் தாத்தா உ.வே.சாமி​நாதர் என்று சாதிய அடை​யாளம் இன்றி விளித்​ததைப் பாராட்​டலாம். ஆனால் இதே வினாத்​தாளில், டாக்​டர் நடேச முதலி​யார், பகவான் பகதூர் பவானந்​தம் பிள்ளை என இடம்​பெற்று இருப்​பதை ஆணை​யம் சற்றே கவனித்​துத் திருத்தி இருக்​கலாம்.

இல்​லம் தேடிக் கல்​வி, விடியல் பயணம் மற்​றும் வழக்​க​மான ‘கொள்கை சார்’ கேள்வி​கள்​… ‘இப்​படித்​தான் இருக்​கும்’ என்று நம்மை நாமே சமா​தானம் செய்து கொள்ள வேண்​டியது​தான். குடியரசு நாள் விழா​வில் பங்​கேற்ற அயல் நாட்​டுத் தலை​வர்​கள், வெவ்​வேறு சட்​டங்​கள் இயற்​றப்​பட்ட ஆண்​டு​கள், வட, தென், கிழக்​கு, நடு திரா​விட மொழிகள் போன்ற வினாக்​கள், சிலருக்​குக் கடின​மாக இருந்​திருக்​கலாம். அதே​நேரம், இராமலிங்க அடிகளார், கட்​ட

பொம்​மன், வெற்​றிவேற்கை நன்​னெறி நல்​வழி நீதிநெறி விளக்​கம் நூலாசிரியர்​கள், தனி வட்​டி, கூட்டு வட்டி தொடர்​பான வினாக்​கள் எல்​லோருக்​கும் மிகுந்த மன ஆறு​தல் தந்​திருக்​கும்.

சிந்து நாகரி​கம், ஜாலியன் வாலா​பாக் சம்​பவம், பிரம்ம ஞான சபை, பல்​ல​வர் குடைவரைக் கோயில்​கள், மக்​கள் தொகைப் பெருக்​கம், வறுமை ஒழிப்​புத் திட்​டங்​கள், நோய்​கள் – பாதிப்​பு​கள், ஜிஎஸ்டி நோக்​கம், பொதுக்​கணிதக் கேள்வி​கள்.. ‘இவ்​வளவு​தா​னா? இதற்கு மேல் எது​வும் இல்​லை​யா?’ என்று யோசிக்க வைக்​கிறது.

மொத்​தத்​தில் டிஎன்​பிஎஸ்சி குரூப் 4 வினாத்​தாள், ‘புது​மை’ ஏதும் இன்றி முற்​றி​லும் பழைய, பழகிய பாதை​யிலேயே பயணித்​து, தேர்​வர்​களைச் சோர்​வடையச் செய்​துள்​ளது. வினாத்​தாள் தயாரிப்​பில், ஆரோக்​கிய​மான மாற்​றங்​களைக் கொண்​டுவர ஆணை​யம் பரிசீலித்​தல், மிக நல்​லது.

நிறை​வாக, இரண்டு – சுவாரஸ்​ய​மான வி​னாக்​கள்:

திரு​வள்​ளுவர் உரு​வத்​தினை முதன்​ முதலில்​ ஓவிய​மாக வரைந்​தவர்​ யார்​?

பொருந்​தா இணை​யைக்​ கண்​டறிக. ஏ-எ; த-ந; ஐ-அ; ற-ன.

கண்​டு​பிடித்​து விட்​டீர்​களா..? ச​பாஷ்!



By admin