• Wed. Jul 30th, 2025

24×7 Live News

Apdin News

டிசிஎஸ் 12,000 பேரை பணிநீக்க முடிவு: ஏ.ஐ. அறிமுகத்தால் ஐடி துறையில் யாருக்கு ஆபத்து?

Byadmin

Jul 29, 2025


டிசிஎஸ் பணிநீக்கம், ஐடி, டாடா கன்சல்டன்சி, ஐடி வேலைஇழப்பு, Tcs layoffs

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான க்ரீத்திவாசன்

30 வயதான கார்த்திக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 9 ஆண்டுகளாக மென்பொறியாளராக உள்ளார். ஒரு வார இறுதி நாளில், அவரின் அலுவலக நண்பரிடமிருந்து ஒரு செய்தி வருகிறது. அந்த செய்தி தான் வார இறுதி விடுமுறை ரசித்து கொண்டிருந்த முகேஷைப் போன்ற பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நடப்பு நிதியாண்டில் சுமார் 12,000 ஊழியர்களை பணியிலிருந்து விடுவிக்கப் போகிறது என்பதே அந்த செய்தி.

இந்த தகவலை அதன் டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான க்ரீத்திவாசன் மணிகண்ட்ரோல் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் உறுதிபடுத்தினார்.

பணிநீக்கம் பற்றி க்ரீத்திவாசன் கூறியது என்ன?

“நாங்கள் வேலை செய்யும் முறை உட்பட அனைத்தும் மாறி வருகிறது. சாத்தியப்படுகிற இடங்களில் நாங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வருகிறோம். இந்த பணிநீக்கத்தால் எங்கள் ஊழியர்களில் 2% பேர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எங்கள் ஊழியர்களுக்கு திறன்களை வளர்க்க தேவையான பயிற்சி உள்ளிட்ட அனைத்தையும் வழங்கி வருகிறோம். வேறு எங்குமே பணியமர்த்த முடியவில்லை என்கிற நிலையில் உள்ளவர்கள் தான் இதன் மூலம் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்” என்று க்ரீத்திவாசன் தெரிவித்திருந்தார்.

By admin