• Sun. Jul 13th, 2025

24×7 Live News

Apdin News

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் கொல்லப்பட்டது ஏன்?

Byadmin

Jul 13, 2025


ராதிகா யாதவ், டென்னிஸ் வீராங்கனை, கொலை, முக்கிய செய்திகள், தலைப்புச் செய்திகள்

பட மூலாதாரம், Kamesh Srinivasan

கொலை செய்யப்பட்ட டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் வீடு குருகிராமில் அமைந்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்டதற்கு ஒரு நாள் கழித்து அங்கே நிசப்தம் குடி கொண்டிருந்தது. சிலர் அவர் வீட்டின் முன்பு அமர்ந்திருந்தனர்.

அனைவரும் ஆண்களே. அனைவரும் அமைதியாகவும் இருந்தனர். ஏதாவது பேசினாலும் கூட சத்தம் வெளியே வராத வகையில் முனுமுனுத்தனர். செய்தியாளர்களிடம் பேசுபவர்களும் கூட தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்த தயக்கம் காட்டினார்கள்.

டெல்லியை ஒட்டியிருக்கும் ஹரியாணாவின் குருகிராமைச் சேர்ந்தவர் ராதிகா. செக்டர் 57-ல் வசித்து வந்த அவர் ஜூலை 10 அன்று காலை கொல்லப்பட்டார். கொலையை அவருடைய அப்பா செய்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குருகிராம் காவல்துறையினர் வழங்கிய தகவலின் படி, ராதிகாவின் பின்புறம் நின்ற வண்ணம் ராதிகாவை நோக்கி சுட்டதில் மூன்று குண்டுகள் உடலை துளைத்துள்ளன. அவருடைய தந்தை, அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

By admin