• Sun. Apr 19th, 2026

24×7 Live News

Apdin News

டெல்லியில் விட்டதை பெங்களூருவில் பிடித்த மில்லர்; ஆர்சிபி-யை வீழ்த்தியது கேபிட்டல்ஸ்

Byadmin

Apr 19, 2026


டெல்லியில் விட்டதை பெங்களூருவில் பிடித்த மில்லர். ஆர்சிபி-யை வீழ்த்தியது கேபிட்டல்ஸ்

பட மூலாதாரம், ANI

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிட்டல்ஸ்.

சின்னசாமி ஸ்டேடியத்தில் தங்களின் 100வது ஐபிஎல் போட்டியை விளையாடிய ஆர்சிபி, அதை வெற்றிகரமாக மாற்றத் தவறியது. அந்த அணி சின்னசாமியில் முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடியதும் இதே ஏப்ரல் 18 (2008ம் ஆண்டு) தான். அந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் தோற்றிருந்தது.

கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டிருந்த நிலையில், அடுத்தடுத்து 2 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார் டெல்லி பேட்டர் டேவிட் மில்லர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான போட்டியை வென்று கொடுக்ககூடிய வாய்ப்பு இருந்தும், அதைத் தவறவிட்டிருந்தார் மில்லர். அவர் ஒரு ரன் ஓட நிராகரித்தது அப்போது பெரும் விவாதப்பொருளானது. அந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டிருந்த மில்லர், இந்தப் போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் தன் திறமையைக் காட்டி தன் அணிக்கு 2 புள்ளிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. அந்த இலக்கை சேஸ் செய்த சன்ரைசர்ஸ், ஒரு பந்து மீதம் வைத்து, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

By admin