• Tue. May 26th, 2026

24×7 Live News

Apdin News

ட்விஷா ஷர்மா மரண வழக்கில் விசாரணையை தொடங்கியது சி.பி.ஐ.

Byadmin

May 26, 2026


மாநில காவல்துறையின் பரிந்துரையின் பேரில், மத்திய புலனாய்வு அமைப்பானது, விசாரணையின் தொடக்க புள்ளியாக அமையும் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை (FIR) மீண்டும் பதிவு செய்து விசாரணையை தொடங்குகிறது. விசாரணையின் முடிவு, தகுதிவாய்ந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று இந்த வழக்கை விசாரித்த, இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, விசாரணை நியாயமானதாகவும், சுதந்திரமானதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருப்பதை உறுதி செய்யும் என்று கூறியது.

போபால் காவல்துறை, ட்விஷாவின் கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோரின் பெயரில், பாரதிய நியாய சன்ஹிதாவின் 80(2), 85 மற்றும் 3(5) ஆகிய பிரிவுகளின் கீழும், வரதட்சணை தடை சட்டத்தின் பிரிவுகளின் கீழும் ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருந்தது.

By admin