• Sun. Sep 6th, 2026

24×7 Live News

Apdin News

தங்களையே தபாலில் அனுப்பிய இருவருக்கு என்ன நடந்தது? வரலாற்றில் இடம் பிடித்த சுவாரஸ்யம்

Byadmin

Sep 6, 2026


'தபாலாகப் பயணித்த இருவர்' - தபால் விதிகளை மீறி இவர்கள் பயணித்தது எப்படி?

பட மூலாதாரம், Guernsey Post

படக்குறிப்பு, தபால் தலைகளில் இடம்பெறவுள்ள ஒரு கேலிச் சித்திரத்தில், ஹாரி டர்னரின் சார்க் தீவுப் பயணம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

தபால் விதிகளில் உள்ள ஓட்டைகளைப் பற்றி செய்தித்தாளில் படித்துத் தெரிந்துகொண்ட ஒருவர் அதனைப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும் என்று விரும்பினார். இன்னொருவர் ஐரோப்பா முழுவதும் போர் பரவியதால் தன் குடும்பத்தினரிடம் சேரத் துடித்துக் கொண்டிருந்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளியில் ஹாரி டர்னர் மற்றும் மேஜர் “பீபாட்” பாமர் ஆகிய இருவர் பிரிட்டனுக்கு அருகே உள்ள சேனல் தீவுகள் இடையே தபால் மூலம் பயணித்துள்ளனர்.

படகில் இடமில்லை என்பதால் மேஜர் பால்மர் தபால் மூலம் பயணிக்கப் பதிவு செய்து கொண்டார்.

பட மூலாதாரம், Guernsey Press/Priaulx Library

படக்குறிப்பு, படகில் இடமில்லை என்பதால் மேஜர் பால்மர் தபால் மூலம் பயணிக்கப் பதிவு செய்து கொண்டார்.

சேனல் தீவுகள் பிரான்ஸின் நார்மண்டி கடற்கரைக்கு அப்பால், ஆங்கிலக் கால்வாயில் அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்டம் ஆகும்.

இந்தத் தீவுகள் பிரிட்டன் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதிகள் அல்ல. மாறாக, இவை சுதந்திரமான நிர்வாகங்களைக் கொண்ட பிரிட்டிஷ் முடியாட்சிக்கு உட்பட்டவை. இவற்றில் வசிப்பவர்கள் பிரிட்டிஷ் குடிமக்கள் ஆவர்.

1905-இல் கெர்ன்சி தீவைச் சேர்ந்த டர்னர், தபால் சேவையைப் பயன்படுத்தி ஒரு மனிதரை உண்மையில் கொண்டு செல்ல முடியுமா என்று கண்டறிய முடிவு செய்தார். முன்னதாக 1900-இல் லண்டனில் ஒருவர் இதைச் செய்திருந்தார்.

By admin