ஆளுநரை கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்
எனவே இன்றைக்கு கொண்டு வந்திருக்கிற அந்த தீர்மானம் என்பது நிச்சயமாக ஆளுநரையோ மற்றவர்களையோ கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்.
எனவே திமுக-வை பொறுத்தவரையில் ஒரு மசோதா கொண்டுவந்து அதன் மூலமாக இதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலே தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலே பாடப்பட வேண்டும் என்கின்ற சட்டபூர்வ அங்கீகாரத்தை அரசு பெற்று தந்தால்தான் அது நிலைத்து நிற்க முடியும். ஆனால் சட்டபூர்வ அங்கீகாரத்தை அளிப்பதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.