• Fri. Jul 11th, 2025

24×7 Live News

Apdin News

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் பேராசிரியர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் | Tamil Nadu Open University Professors protest for 2nd day

Byadmin

Jul 10, 2025


சென்னை: தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகம் தொலை​தூரக்​கல்வி வாயி​லாக பல்​வேறு பாடப்​பிரிவு​களில் இளங்​கலை, முதுகலை, டிப்​ளமோ மற்​றும் சான்​றிதழ் படிப்​பு​களை நடத்தி வரு​கிறது. தொலை​தூரக்​கல்​வி​யில் சேரும் மாணவர்​களுக்கு செமினார் வகுப்​பு​கள் நடத்​து​வதற்​கும், பாடப்​புத்​தகங்​கள் விநி​யோகம் தொடர்​பான இதர பணி​களைக் கவனிப்​ப​தற்​கும் உதவி பேராசிரியர்​கள் மற்​றும் இணை பேராசிரியர்​கள், பேராசிரியர்​கள் என 40-க்​கும் மேற்​பட்​டோர் உள்​ளனர்.

இந்​நிலை​யில், அண்​மை​யில் நடந்த பல்​கலைக்​கழக நிதிக்​குழு கூட்​டத்​தி​லும், தொடர்ந்து நடை​பெற்ற சிண்​டிகேட் கூட்​டத்​தி​லும், இந்த பேராசிரியர்​களை, ஆசிரியர் பற்​றாக்​குறை​யுள்ள அரசு கல்​லூரி​களுக்கு அனுப்பி மாணவர்​களுக்கு பாடம் நடத்த ஏற்​பாடு செய்​ய​லாம் என முடிவு செய்​யப்​பட்​டது. இதைத்​தொடர்ந்​து, பேராசிரியர்​களின் பட்​டியலை கல்​லூரி கல்வி ஆணை​யர் அலு​வல​கத்​துக்கு பல்​கலைக்​கழக பதி​வாளர் அனுப்​பி​யுள்​ளார்.

இந்​நிலை​யில், பல்​கலைக்​கழகத்​தில் பணி​யாற்​றும் தங்​களை அரசு கல்​லூரி​களுக்​கு சென்று பாடம் நடத்​தச் சொல்​லும் பல்​கலைக்​கழக நிர்​வாகத்​தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரி​வித்து பேராசிரியர்​கள், பல்​கலைக்​கழக வளாகத்​தில் தொடர் உள்​ளிருப்பு போராட்டத்தை கடந்த செவ்​வாய்க்​கிழமை தொடங்​கினர். இதில் உதவி பேராசிரியர்​கள், இணை பேராசிரியர்​கள், பேராசிரியர்​கள் என 35-க்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றுள்​ளனர்.இப்​போ​ராட்​டம் நேற்று 2-வது நாளாக நீடித்​தது.



By admin