• Tue. Jul 28th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வுக்கு என்ன காரணம்? மேலும் அதிகரிக்குமா?

Byadmin

Jul 28, 2026


அரிசி விலை உயர்வு, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“1,400 ரூபாய்க்கு விற்பனையான 25 கிலோ மூட்டை அரிசி இன்று 1,700 முதல் 1,800 ரூபாய் வரை விற்பனையாகிறது. அடுத்தடுத்த வாரங்களில் இது மேலும் அதிகரிக்கும் என அரிசி வணிகர்கள் தெரிவிக்கின்றனர்”

திருப்பூர் மாவட்டத்தில் மளிகைக் கடை நடத்தி வரும் மைதிலியின் கருத்து இது. அரிசியின் மொத்த விற்பனை விலை அதிகரிப்பதால் சில்லறை விற்பனை விலையையும் அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

“25 கிலோ வரையிலான சில அரிசி வகைகள் மூட்டை ரூ.2,000 வரை கூட செல்கிறது. உள்ளூர் அரிசி வகைகளும் விலை உயர்ந்துள்ளது,” என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, பல்வேறு தரப்புகளில் இருந்து குரல்கள் எழுந்து வருகின்றன.

அரிசியின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாமல் போனதும் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து குறைந்ததுமே இதற்கு காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

By admin