• Tue. Jul 28th, 2026

24×7 Live News

Apdin News

பிகார்: போராடும் மாணவர்களை நோக்கி ஏகே-47 ரக துப்பாக்கியை நீட்டும் காவலர் – முழு பின்னணி

Byadmin

Jul 28, 2026


சிவான் மாவட்டத்தில் ஏகே-47 துப்பாக்கி சுடப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது

பட மூலாதாரம், @yadavtejashwi

படக்குறிப்பு, சிவான் மாவட்டத்தில் ஏகே-47 துப்பாக்கி சுடப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பிகாரின் சிவான் மாவட்டத்தில் ஜூலை 25 அன்று, தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை வலியுறுத்திப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்களின் குழுவை நோக்கி, பிகார் காவல்துறை காவலர் ஒருவர் ஏகே-47 துப்பாக்கியை நீட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. பிகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், இது மாணவர்கள் மீது காவல்துறை ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட நாட்டின் முதல் சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பூரன் ஜா, பிபிசி நியூஸ் ஹிந்தி செய்தியாளர் சீட்டு திவாரியிடம், இந்த விவகாரத்தில் பிகார் காவல்துறையின் எஸ்ஐடி காவலர் அபிஷேக் படேல் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

எஸ்பி பூரன் ஜா பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், மூன்று போராட்டக்காரர்களில் ஒருவருக்கு காவல்துறையின் தோட்டா பாய்ந்துள்ளது, மீதமுள்ள இருவருக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

காயமடைந்தவர்களில் எவர் மீதும் ஏகே-47 துப்பாக்கியால் சுடப்பட்ட தோட்டாக்கள் பாயவில்லை என்றும் அவர் கூறினார். ‘ஏகே-47 துப்பாக்கி காற்றில் சுடப்பட்டது, அதனால் பாயும் தோட்டாக்கள் உயிருக்கு ஆபத்தானதாக இருக்கும்’ என்று அவர் மேலும் கூறினார்.

By admin