• Tue. Jul 28th, 2026

24×7 Live News

Apdin News

துலீப் சிங்: பிரிட்டனை விட்டு வெளியேற முயன்றும் அனுமதி மறுக்கப்பட்ட இந்திய அரசரின் கதை

Byadmin

Jul 28, 2026


துலீப் சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரால் நாடு கடத்தப்பட்ட துலீப் சிங், தனது வாழ்நாளில் பலமுறை இந்தியாவுக்குத் திரும்ப முயன்றார், ஆனால் அவருக்கு எப்போதும் அனுமதி மறுக்கப்பட்டது.

    • எழுதியவர், ஷிவானி சௌத்ரி
    • பதவி, எசெக்ஸ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

துலீப் சிங் (1838-1893) தனது ஐந்தாவது வயதில் சீக்கிய மகாராஜா பட்டத்தைப் பெற்றார். ஆனால், 1849-ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரால் சீக்கியப் பேரரசு இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பிரிட்டனுக்கு நாடு கடத்தப்பட்டார். அந்த மகாராஜா இந்தியாவுக்குத் திரும்ப முயன்றார், ஆனால் அவருக்கு எப்போதும் அனுமதி மறுக்கப்பட்டது.

இறுதியில் அவர் தனது 25-வது வயதில் சஃபோல்க்கில் உள்ள எல்வெடன் ஹாலை விலைக்கு வாங்கி, ஜெர்மன் மற்றும் அஃபிசீனிய வம்சாவளியைச் சேர்ந்த தனது முதல் மனைவியான பம்பா முல்லருடன் குடியேறினார்.

நூறு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், 1996-ஆம் ஆண்டில் எசெக்ஸில் உள்ள ஹால்ஸ்டெட் பகுதியைச் சேர்ந்த பீட்டர் பன்ஸ் அந்த இல்லத்துக்குச் சென்று, துலீப் சிங்கின் வாழ்க்கையால் உடனடியாக ஈர்க்கப்பட்டார்.

அவர் அந்த அரசர் பற்றிய கதைகளைச் சேகரிப்பதில் மூன்று தசாப்தங்களைச் செலவழித்தார். அது தனது சொந்த வேர்களை ஆராய்ச்சி செய்வது போல் உணர்ந்ததாக அவர் கூறினார்.

துலீப் சிங்

பட மூலாதாரம், Peter Bance Collection

படக்குறிப்பு, இளவரசி சோஃபியா துலீப் சிங் ஒரு வாக்குரிமை இயக்க செயற்பாட்டாளர் ஆவார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் பெண்களின் உரிமைக்காகப் போராடினார்.

1850-களில் துலீப் சிங் பிரிட்டனுக்கு வந்தது, அந்த நாட்டில் பஞ்சாபிகளின் வரலாறு எவ்வளவு பழமையானது என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று பீட்டர் பன்ஸ் கூறினார்.

By admin