பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நேற்று முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீரின் 35 சதவீத நிலம் பாகிஸ்தான் வசம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) என அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தனி ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது.
இங்கு மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை, உரிமைகள் மறுப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் பெருமளவில் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
தேர்தல்
பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) நேற்று முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. பல பகுதிகளில் பொதுமக்கள் தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளனர்.
வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களோ அல்லது பாதுகாப்புப் பணியாளர்களோ இல்லாத வெறிச்சோடிய காட்சிகளே காணப்படுகின்றன.
மிகக் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாக்கிஸ்தான் அரசு இதுவரை வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடவில்லை.