• Wed. Sep 16th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ்நாட்டு கோவில்களுக்கு அசாமிலிருந்து வரும் 5 யானைகள் – காரணங்கள், எதிர்ப்புகள் என்ன?

Byadmin

Sep 16, 2026


தமிழ்நாடு, யானைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அசாம் மாநிலத்திலிருந்து ஒரு யானை கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வேறு கோவில்களுக்கு மேலும் 4 யானைகளை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அசாமில் உள்ள தனியாரிடமிருந்து நன்கொடையாளர்களால் இந்த யானைகள் வாங்கப்பட்டு, கோவில்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்குப் பல தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அசாம் யானைகளை இங்கே கொண்டு வருவது தேவையற்ற நடவடிக்கை என்கிறார் காட்டுயிர் ஆர்வலர் முரளீதரன்.

அசாம் காலநிலையில் உள்ள யானைகளால் இங்குள்ள கோவில்களில் உள்ள சூழ்நிலையில், காலநிலையில் வைத்துப் பராமரிப்பது பெரும் சிரமம் என்கிறார் யானை ஆராய்ச்சியாளர் சிவசுப்ரமணியம்.

ஆனால் யானைகளால் நீண்ட நெடிய தூரம் பயணம் செய்ய முடியுமென்றும், அவற்றால் எந்த காலநிலையிலும் வாழப்பழகிக் கொள்ள முடியும் என்கிறார் யானை திட்டத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினரும், ஏராளமான யானைகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவருமான வன கால்நடை ஓய்வு பெற்ற மருத்துவர் மனோகரன்.

வனத்துறை யானைகள், முகாம்களில் உள்ள யானைகளை கோவில்களுக்கு வழங்க முடியாது என்று பிபிசியிடம் கூறிய தமிழக தலைமை காட்டு உயிரினக்காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா, அவற்றுக்கு காட்டுயிர் தன்மை மாறாமல் பயிற்சி வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். அசாம் யானைகளின் உரிமை மற்றும் போக்குவரத்து விதிகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு, அசாம் வனத்துறையினருக்கே உள்ளது என்றார் அவர்.

By admin