சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* திமுக கூட்டணியை உடைக்க பல தரப்பினர் முயன்றனர்.
* கடந்த 2 ஆண்டுகளாக என்னை குறி வைத்து காய்களை நகர்த்தினார்கள்.
* திமுக கூட்டணியை பலவீனப்படுத்த இடம் தரமாட்டேன் என்பதை நடைமுறைப்படுத்தி காட்டினேன்.
* திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முடிந்த வரை நான் உறுதுணையாக இருந்திருக்கிறேன்.
* என்னை குறிவைத்து திட்டமிட்டு அவதூறு பரப்பினர். சாதிய, மதவாத சக்திகள் என்னை குறிவைத்து காய் நகர்த்தினர்.