பல்லாவரம் தொகுதியில் குண்டும் குழியுமான மோசமான சாலைகளை கணக்கெடுத்து அது குறித்த அறிக்கையை அந்தந்த துறை அமைச்சர் இடம் கொண்டு சேர்த்து அதற்கான தீர்வுகளை காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழைக்காலம் வருவதற்கு முன்பு குப்பைகளை முழுவதும் அகற்ற வேண்டும். தொகுதி முழுவதும் மழை நீர் வடிகால் பணிகளை முழுவதும் சீரமைக்க வேண்டும். மழைக்காலத்தில் மழை நீர் தேக்கம் என்ற ஒரு பிரச்சனையை இருக்கக்கூடாது என்ற நோக்கில் நாங்கள் இந்த பணிகளை கணக்கிட்டு செய்து வருகிறோம்.
தொகுதியில் உள்ள பாதாள சாக்கடை மூடிகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு மூடப்படும். தொகுதியில் சுகாதார சீர்கேடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளும் ஆய்வு செய்து அகற்றப்படும். திருநீர்மலை ஏரியை முழுவதும் ஆய்வு செய்து அங்கு எவ்வளவு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்த்துவிட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நாங்கள் தற்போது தான் புதிய ஆட்சி அமைத்துள்ளோம். தொகுதி மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை முதலில் ஆராய்ந்து அதற்கான தீர்வை காண உள்ளோம். மேலும் தொகுதியில் எந்தெந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்து அதற்கான பணியை செய்ய உத்திரவிட உள்ளேன்.