• Sat. Jun 27th, 2026

24×7 Live News

Apdin News

தாஜ்மஹால்: காதல் சின்னத்தில் மறைந்துள்ள மும்தாஜின் வலி நிரம்பிய கதை

Byadmin

Jun 27, 2026


ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால்

    • எழுதியவர், வக்கார் முஸ்தபா
    • பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

ஜூன் 17, 1631 அன்று, தக்காணத்தின் (தென்னிந்தியா) முகலாயத் தலைமையகமான பர்ஹான்பூரின் கடுமையான கோடை வெப்பத்தில், ஐந்தாவது முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் அன்பிற்குரிய ராணியான மும்தாஜ் மஹால், பதினான்காவது முறையாகப் பிரசவ வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்.

அவர்கள் ஒன்றாக வாழ்ந்த 19 ஆண்டுகளில், இந்த அரச தம்பதியருக்கு ஏற்கனவே பதிமூன்று குழந்தைகள் பிறந்திருந்தன, அவர்களில் ஏழு பேர் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர்.

உயிரோடு இருந்த ஆறு குழந்தைகளில் ஜஹான் ஆரா மூத்தவர் ஆவார். அப்போது அவருக்கு 17 வயது. பிரசவத்தின் போது ஜஹான் ஆரா தனது தாயாருடன் இருந்தார்.

அரச மருத்துவர்களும் அங்கு இருந்தனர். 17 வயதான ஜஹான் ஆரா, ஏற்கனவே தனது தாயாருக்குப் பல பிரசவங்களின் போது உதவியிருந்தார்.

ஆனால் இந்த முறை, பதினான்காவது குழந்தை பிறக்கும் சமயத்தில் ஏதோ ஒன்று தவறாக நடந்தது.

By admin