விநாயகர் பந்தல்களில் லட்டுகளை திருடி தின்றால் அதிர்ஷ்டம் எனும் மூடநம்பிக்கையை பயன்படுத்தி மர்ம கும்பல் இரவு நேரங்களில் லட்டுகள், உண்டியல் தொகை, விழா அமைப்பாளர்களின் செல்போன்களை கொள்ளையடிக்கிறது. பகல் நேரங்களில் வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் பிக்பாக்கெட் கும்பல்கள் நகை, பணம், செல்போன்களை பறிப்பதால், போலீசார் வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.