• Mon. Sep 23rd, 2024

24×7 Live News

Apdin News

திருப்பதி லட்டு: பிரகாஷ் ராஜ் – பவன் கல்யாண் இருவரும் என்ன கூறினர்?

Byadmin

Sep 23, 2024


திருப்பதி லட்டு பிரச்னை  :  பிரகாஷ் ராஜ் வைத்த கோரிக்கைக்கு பவன் கல்யாணின் எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், Getty Images/Janasena party

படக்குறிப்பு, நடிகர் பிரகாஷ் ராஜ், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

திருப்பதி கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை, பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சமூக வலைதளங்களில் விவாதத்துக்கும் வழிவகுத்தது.

‘எக்ஸ்’ தளத்தில் இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடக விவாதங்கள் பிரச்னையின் தீவிரத்தை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ட்வீட்டும், நடிகர் பிரகாஷ் ராஜின் ட்வீட்டும் தான் விவாதத்தின் மையமாக உள்ளது.

லட்டு தயாரிப்பில் கலப்பட நெய் பயன்படுத்தியது குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக்கு குழு அமைத்துள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உண்மையில் நடந்தது என்ன?

திருப்பதி லட்டு பிரச்னை  :  பிரகாஷ் ராஜ் வைத்த கோரிக்கைக்கு பவன் கல்யாணின் எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், Twitter : Hindu IT Cell

செப்டம்பர் 19 அன்று, திருப்பதி கோவிலின் லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக இந்து ஐடி செல் தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்தது.

By admin