• Wed. Apr 22nd, 2026

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தேர்தலில் வெற்றி – தோல்வியை முடிவு செய்யுமா?

Byadmin

Apr 22, 2026


மலை உச்சியில் இருப்பது விளக்குத்தூணா சர்வே கல்லா என்பதில் விவாதம் உள்ளது

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் கடந்த டிசம்பர் மாதம் அந்தப் பகுதியையே பதற்றத்திற்கு உள்ளாக்கியது. நான்கு மாதங்களே கழிந்திருக்கும் நிலையில், நடக்கும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த விவகாரம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும்?

மதுரை நகரிலிருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது திருப்பரங்குன்றம்.

திருமுருகாற்றுப்படை, கலித்தொகை, பரிபாடல் என பல பழங்கால தமிழ் இலக்கிய நூல்களில் இடம்பெற்றுள்ள ஒரு பகுதி இது. இப்படி நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட இந்தத் திருப்பரங்குன்றம், கடந்த 2025-ஆம் ஆண்டின் இறுதியில் ஒரு பெரும் சர்ச்சையின் மையமாக உருவெடுத்தது.

2025-ஆம் ஆண்டின் கார்த்திகை மாதம் நெருங்கியபோது, திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்திருக்கும் தர்காவில் இருந்து சற்றுத் தூரத்தில் உள்ள தூண் ஒன்றில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் கோர ஆரம்பித்தன. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டு சாதகமான தீர்ப்பும் வழங்கப்பட்டது.

ஆனால், இது ஒரு புதிய வழக்கம் எனக் கூறிய இந்து சமய அறநிலையத் துறை அந்தத் தூணில் தீபம் ஏற்ற மறுத்தது.

By admin