பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் ஈரானுடனான தனது போர் நிறுத்தத்தை அமெரிக்கா நீட்டிப்பதாக அதிபர் டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியக் குடியரசிடம் இருந்து ஒரு “ஒருங்கிணைந்த முன்மொழிவுக்காக” காத்திருக்கும் வேளையில், பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால், அமெரிக்க இராணுவம் ஈரானிய துறைமுகங்களுக்கான தனது முற்றுகையை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நமது இராணுவம் முற்றுகையை தொடரவும், மற்ற எல்லா வகையிலும் தயாராகவும் திறனுடனும் இருக்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன். எனவே, அவர்களின் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு, விவாதங்கள் ஒரு முடிவுக்கு வரும் வரை போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும்,” என்று டிரம்ப் மேலும் கூறினார்.
குறைந்தபட்சம் தற்போதைக்கு, ஈரான் பேச்சுவார்த்தைகளுக்குத் தயக்கம் காட்டி வருவதால், இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைக்காகத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இஸ்லாமாபாத்திற்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை வெள்ளை மாளிகை நிறுத்தி வைத்துள்ள நிலையில், அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.